Monday, March 20, 2017

கண்ணம்மாப் பேட்டை - 1

"உங்க வீடு எங்க?"
"தி.நகர்ல வரதராஜன் தெரு!"
"அது எங்க இருக்கு?"
"முத்துரங்கன் ரோட்ல இருந்து மூணாவது தெரு!"
"முத்துரங்கன் ரோடா?"
"ஆமா! தி.நகர் போலீஸ் ஸ்டேஷன் இருக்கில்ல, அதுக்கு பின்னால போலீஸ் குவாட்டர்ஸ், அத தாண்டினா ஹவுசிங் போர்டு, அதுக்கு ஆப்போசிட் ரோடு!"
மிக கவனமாக தவிர்த்தேன், நண்பன் வீட்டுக்கு வருவதை அல்ல! ஆனாலும் பிடித்து விட்டான்!
"அட, கண்ணம்மா பேட்டைன்னு சொல்லு!"
சொல்ல போனால் எனக்கு தயக்கம் ஒன்றுமில்லை. ஆனால் அதை வைத்து பல பகடிகள் பின்னாலும் முன்னாலும் பேசப்படும்.
"என்னா! வூட்ல சொல்லிக்கினு வந்திட்டியா! நேரா கண்ணம்மா பேட்டைதான்! போ! போ!" என்ற சொலவடையை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் கேட்டிராவிட்டால் நீங்கள் சென்னை வாசியல்ல!
ஸ்டாப்! இந்த பதிவு உலகப் பிரபலமான மயானத்தை பற்றியல்ல! தி.நகருக்குளே இருக்கும் ஒரு தீ நகரத்தைப் பற்றி!
பாடல் பெற்றிருக்கக் கூடிய ஸ்தலம். டைரக்டர் Shankar ஜென்டில் மேன் செய்வதற்கு முன்னர் இங்குதான் இருந்தார் என்று கேள்வி. ஆனால் எப்படி காதலனில் வரும் பேட்டை ராப் சாங்கில் நம்ம பேட்டையை மிஸ் செய்தார் என்று தெரியவில்லை!
இன்னும் தொடரும்...

No comments:

Post a Comment

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்ட...