"ஒன்பதுலயும் சனி உச்சம் பெற்ற ஒருவருக்குத்தான்
கோயிலுக்கு போனாலும் பிரசாதமாக
உப்புமாவை கடவுள் தருவார்"
என்ற மீம்ஸை படித்தபோது "ஆ! என்னடா உப்புமாவாவுக்கு வந்த சோதனை" என்றே தோன்றியது. நம்மைப் போன்ற உப்புமா பதிவர்களுக்கு அந்த பெயர் வர காரணம் ஆன இந்த சிற்றுண்டியை நாம் சப்போர்ட் செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்?
யுவர் ஹானர்!
- ரெடி டு ஈட் உணவுவகைகள் வருவதற்கு முன்னரே இந்தியன் இன்னும் சொல்லப் போனால் தமிழன் கண்டுபிடித்த உன்னத உணவு உப்புமா.
- பொங்கல் போன்று ஸ்லீப்பிங் பில் ஆக எல்லாம் இது வேலை செய்து நம்மை மாட்டி விடாது.
- சமையல் தெரியாத பெண்களுக்கும் பேச்சிலர் மற்றும் பேச்சு இலர் (நம்மள சொன்னேன்) ஆக இருக்கும் ஆண்களுக்கும் ஆபத்பாந்தவன்.
- இட்லி சப்பாத்தி பரோட்டா போன்று பலத்த processing எல்லாம் தேவை இல்லை. வாணலி, தண்ணி, ரவை இந்த மூன்றும் தான் மெயின் காம்போனென்ட். சமையல் செய்பவர்கள் தங்கள் கற்பனைக்கு ஏற்ப மானே தேனே என்று வேண்டியதை போட்டு கொள்ள வேண்டியதுதான்.
- ரவா உப்புமா, அவல் உப்புமா, சேமியா உப்புமா, கிச்சடி, காராபாத் என்ற பல வெரைட்டிகள் இருக்கும் போதே உங்களுக்கு தெரியவில்லை நம் உப்புமா சிங் இஸ் கிங் என்று!
- எப்படி நல்ல பிள்ளை வளர்ப்புக்கு பெற்றோர்கள் காரணமோ அது போலத்தான் நல்ல உப்புமாவுக்கு தேர்ந்த சமையல் வல்லுநர் தேவை(நான் அவனில்லை!). தயவு செய்து உப்புமா மேல் பழியை போடாதீர்கள்!
இன்னும் உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் பெங்களூரு வாருங்கள். அனைத்து தர்ஷனி மற்றும் திண்டிகளெல்லாம் "நம்கே காராபாத் கொடி" என்று அவர்கள் கொடி பிடிப்பதை.
தட்ஸ் ஆல் யுவர் ஹானர்!
இப்பொழுது தான் நம் தங்கமணி மாவு முடிந்து விட்டது நாளை உப்புமாதான் என்று மெனு சொல்லி கொண்டிருந்தார். நாளை நம்முடைய பதிவை நானே படித்து மனதை தேற்றி கொள்ள வேண்டியதுதான்!
No comments:
Post a Comment