என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்டவ் மேல் ஏறப் போகும் காமெடி ஒன்றை பகிர்ந்திருந்தார் நண்பர். முதலில் பார்த்தபொழுது எடை போடும் எந்திரம் என்றே நம்பினேன். புரிந்தபின் நக்கலாக இது எடை மெஷின் இல்லையா என்று ரொம்பவே அப்பாவியாகக் கேட்க ஷாக் அடித்தது போல ஆனார் நண்பர்.
சரி தலைப்புக்கு வருவோம்! உங்களுக்கு சமையல் தெரிந்தாலும் சரி, தெரியாவிடிலும் சரி எப்படி அடுப்படிக்குள் நுழையாமல் இருப்பது என்று சொல்லித் தருகின்றேன்!
அதற்காக அடுப்படிக்குள் எட்டிப் பார்க்காமலே இருந்து விடாதீர்கள். சுடு தண்ணீர் ஓவனில் வைக்கலாம், டிப் டீ போட்டு தரலாம். வீட்டில் ஏதேனும் பார்ட்டி இருந்தால் பெருந்தன்மையாக நான் ஆனியன் ரைத்தா செஞ்சு தர்றேன், மத்ததெல்லாம் நீ பாத்துக்க என்று வேலையை (?) பகிரலாம்.
இப்படியாக நடந்து கொண்டீர்களேயானால் இன்று மட்டும் அல்ல வாழ்க்கையில் எல்லா நாளும் இன்ப நாளே!
பி.கு. பொது நலன் கருதி இன்னும் ஏதேனும் உத்திகள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்.
சரி தலைப்புக்கு வருவோம்! உங்களுக்கு சமையல் தெரிந்தாலும் சரி, தெரியாவிடிலும் சரி எப்படி அடுப்படிக்குள் நுழையாமல் இருப்பது என்று சொல்லித் தருகின்றேன்!
- ஒன் ஆப் தி பெஸ்ட் சாம்பார் இன் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா என்று தங்கமணியிடம் சாம்பார் சாப்பிடும் பொழுதெல்லாம் சொல்லுங்கள்! என்றேனும் அப்படியாக மாற ஆண்டவன் அருள மாட்டாரா என்ன?
- தப்பி தவறி கூட எங்க அம்மா இதை இப்படி செய்வார், அதை அப்படி செய்வார், இதை நீ இப்படி செய்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று சொல்லி தொலைக்காதீர்கள். அதற்கு அப்புறம் பூரி எல்லாம் வராது, காலம் பூரா பூரிக்கட்டைதான்!
- இதற்கு அப்புறமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் தங்கமணி உங்களை ஏதாவது சமையல் செய்து தருமாறு கேட்க, நீங்களும் கரண்டி பிடித்தீர்களேயானால் தப்பி தவறி கூட சுவை என்ற ஒன்றே இல்லாத மாதிரி பார்த்துக் கொள்ளுங்கள்.எப்படியும் அப்படிதான் சுவை இல்லாமல் வரும் என்பவர்கள் என் ஜாதி! உதாரணத்திற்கு தோசையை கருக்கி விடவும், சப்பாத்தியை வறட்டி போல சுடவும், காரத்தை அள்ளி கொட்டவும்! இதற்கு அப்புறம் உங்களை சமையல் செய்ய சொல்வார்கள்?
- இந்த உபாயத்தையும் சரியாக பயன் படுத்த முடியாதவர்கள் அடுத்து செய்ய வேண்டியது தங்கமணிக்கு பிடிக்காத ஐட்டம்கள். பாவக்காய் பொரியல், பீர்க்கங்காய் சொரியல், கருவாடு மசியல் என்று வரிசை கட்டி ஆசையாக செய்து கொடுத்தால் அதற்கு அப்புறம் நிரந்தர ரெஸ்டுதான்!
- இப்படி நிரந்தர ரெஸ்ட் எடுக்கும் பொழுது அடிக்கடி "நீ பண்ற மாதிரி எனக்கு சுட்டு போட்டாலும் வராது" என்றும் நல்ல காரமாக செய்த புளி குழம்பையும் இரண்டு லிட்டர் குடித்துவிட்டு "தேன்! தேன்!" என்றும் சொல்லி வைத்தீர்கள் என்றால் வாரம் ஒரு முறை பிரியாணி என்ற வஸ்துவை ருசி பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கருட புராணத்தில் சொல்லியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
அதற்காக அடுப்படிக்குள் எட்டிப் பார்க்காமலே இருந்து விடாதீர்கள். சுடு தண்ணீர் ஓவனில் வைக்கலாம், டிப் டீ போட்டு தரலாம். வீட்டில் ஏதேனும் பார்ட்டி இருந்தால் பெருந்தன்மையாக நான் ஆனியன் ரைத்தா செஞ்சு தர்றேன், மத்ததெல்லாம் நீ பாத்துக்க என்று வேலையை (?) பகிரலாம்.
இப்படியாக நடந்து கொண்டீர்களேயானால் இன்று மட்டும் அல்ல வாழ்க்கையில் எல்லா நாளும் இன்ப நாளே!
பி.கு. பொது நலன் கருதி இன்னும் ஏதேனும் உத்திகள் இருந்தால் பின்னூட்டத்தில் பகிருங்கள்.