Wednesday, March 22, 2017

மலை நகரம் - 1

தொபுக்கட்டீர்!
ஒவ்வொரு முறை ரயில் திருச்சி காவேரியை கடக்கும் போதும் இந்த சத்தம் தான் மனதினுள் வந்து போகும்.
தொபுக்கட்டீர்!
நான் சிறு வயதில் பார்த்திருக்கின்றேன். ஆடி மாதம் காவேரி பெருக்கெடுத்தோடும்போது ஸ்ரீரங்கத்தில் ரயிலேறி தடக் தடக் என ரயில் காவேரியை கடக்கையில் தொபுக்கட்டீர் என இளைஞர்கள் குதிப்பதை.
உங்கள் சொந்த ஊர் எது என்று கேட்டால் என்னவென்று சொல்வீர்கள்? உங்கள் அப்பாவின் ஊரா? நீங்கள் வளர்ந்த ஊரா? அப்பாவின் பூர்வீகம் மதுரை என்றாலும் அம்மாவின் ஊரான, நான் பிறந்த ஊரான திருச்சியையே நான் சொந்தம் கொண்டாடுவேன். காவேரி தண்ணீர் குடித்து வளர்ந்தவன் என்று பெருமை பேசுவேன்.
காவேரி தாகம் தனிப்பவள் மட்டும் அல்ல, தாய்ப் பால் கொடுப்பவள். காவேரி ஒரு உணர்வு. சிறு வயதில் ஒவ்வொரு முறை கோடை விடுமுறைக்கு திருச்சி சென்றாலும் அம்மா மண்டபத்தில் குளிக்க தவறியதில்லை. ஸ்ரீரங்கநாதனை தரிசிக்க மறந்ததில்லை. காவேரியில் தண்ணீர் இல்லாவிடில் மனம் சூம்பி விடும். ஆடி 18 அன்று ஆற்றில் நீர் ஓடவில்லையென்றால் மனம் பதைபதைக்கும்.
மேகதாதுவில் இன்னொரு அணை என்ற சேதி கேட்கும் பொழுதே ஆற்றொணா துயரம் கொள்வதை தடுக்க முடியவில்லை. அடுத்த ஜல்லிக்கட்டு காவேரிக்குதான்!
நடந்தாய் வாழி காவேரி!
தொடரும்...

No comments:

Post a Comment

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்ட...