Tuesday, April 4, 2017

சாரி சொல்லு!

"எங்க வெச்சேன்..." 

ரதி குழம்பினாள். கார் சாவியக் காணோம்! கைப் பையில் துழாவினாள். இல்லை!

"என்னங்க! என்னோட கார் சாவிய எங்க வெச்சேன்னு பாத்தீங்களா?"

"ஆமா! ஆபீஸ் விட்டு வந்தவுடனே சாவிய விட்டு தூக்கி அடி! ஒரு இடத்தில வைக்காத!" என்று கத்திக்கொண்டே கராஜில் இருந்த தன் காரை கிளப்பினான் ரமேஷ். ரதிக்கு வெறுப்பாய்  வந்தது.

எட்டு மணிக்கு ஸ்கூல் பஸ் வந்துவிடும். பெரிய குட்டி ராமை ஸ்கூல் பஸ்ஸில் விட்டுவிட்டு சின்ன குட்டி ரம்யாவை டே கேரில் விடவேண்டும். இன்னும் பத்து நிமிஷம் தான் இருக்கிறது. 

"டே ராம்! அம்மா கார் சாவிய பாத்தியாடா?" என்ற ரதியை இட்லியை வாயால் வைத்துக் கொண்டே இடம் வலமாய் தலையை ஆட்டினான் ராம். எரிச்சல் அதிகமாகி கொண்டே போனது! 

"அது என்ன கசப்பு மாத்திரையா? ஏன் வாய்லயே வச்சிருக்கே?" என்று தன்னுடைய கையாலாகதத்தனத்தை அவனிடம் காட்டினாள். ராம் முகம் சுண்டியது.

ரம்யாவின் பொம்மை கூடையில் உள்ளே விழுந்துவிட்டதோ?.கூடையை மொத்தமாக கவிழ்த்தாள். பரபரவென்று தேடினாள். இல்லை. வந்த கோபத்தில் கைக்கு வந்த யானை பொம்மையை ஓங்கி சுவற்றில் அடித்தாள். யானை மூளியானது.


விளையாடி கொண்டிருந்த நான்கு வயது ரம்யா இதைப் பார்த்ததும் முகம் சுருங்கினாள். அழப் போன அவள் அழுகையை கோபமாக மாற்றி மழலையில் சொன்னாள் "மம்மி! சே சாரி டு தி எலிபன்ட் பர்ஸ்ட்!"

தூக்கி வாரி போட்டது ரதிக்கு. சே! என்ன ஒரு மடத்தனம்.

"அடி கண்ணே! மன்னிச்சுக்கோடி என் ராசாத்தி!"

No comments:

Post a Comment

ஆண்கள் சமையல் செய்வதிலிருந்து தப்பிப்பது எப்படி?

என்னுடைய வாட்சப் குழு ஒன்றில் என்னைப் போல சமையலறை பக்கம் எட்டிப் பார்க்காத பகுத்தறிவாளர் ஒருவர் எடை போடும் எந்திரம் என்றெண்ணி Induction ஸ்ட...